You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

சக்தியின் வடிவங்களில் ஒன்றான ஒலியானது மனிதனதும் சக உயிர்களினதும் பிரதான தொடர்பாடல் ஊடகமாக இருக்கின்றது யாவரும் அறிந்ததே. இருப்பினும் இவ் ஒலி கூட மிதமிஞ்சியதாக இருக்கும்போது மனிதனதும் ஏனைய உயிரினங்களினதும் செயற்பாடுகளையும் சமநிலையையும் பாதிக்கும் அளவிற்கு மாசாக்கத்தை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கின்றது. ஒலிமாசாக்கம் என்பது மற்றைய சூழல் மாசாக்கங்கள் போன்று அல்லது சூழலில் எந்த ஒரு விளைவையும் விட்டு வைப்பதில்லை. ஆனாலும் அது மனிதனது உடல்நலத்தையும் உளநலத்தையும் பாதிப்படையச் செய்கின்றது. மிகவும் உரத்த ஒலிமற்றும் உரப்புக் குறைந்த […]

ஆரோக்கியமான மருத்துவத்துறை என்பது மக்களின் உடல், உள சமூக விருத்திகளின் ஊடாகத் தரமான வாழ்க்கை வழங்குகின் மிக உன்னதமான ஒரு தொழிற்பாடு ஆகும். இதன் அடிப்படையில் குறிப்பிட்ட நோக்கத்தை அடைவதற்கான நவீன ஆங்கிலத்துறையினுடைய வளர்ச்சியின் மூலமாக அண்மைக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தேர்ச்சியும், சிறப்பத் தன்மை வாய்ந்ததுமான சுகாதார தொழில் வாண்மையாளர்களைக் கொண்ட சிகிச்சை முறைகளைத் தன்னகத்தே இது உள்ளடக்கியுள்ளது. இதன் அடிப்படையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை முறை விசேடத்துவம் பெற்றதும், தற்காலத்தில் மிகவும் அசசியமான […]

இன்று நாம் இயந்திர மயமான உலகில் வாழ்கின்றோம். காலையிலிருந்து இரவு வரை வேலை, படிப்பு. டிவி பார்த்தல் என நேரம் போய் விடுகின்றது. இதனால் நாம் உண்ணும் உணவைக் கவனிப்பதில்லை. இலகுவாகச் சமிபாடடையக் கூடிய, விரைவாகத் தயாரிக்கக் கூடிய பதப்படுத்தப்பட்ட மற்றும் பொதி செய்யப்பட்ட உணவு வகைகளை நாடுகின்றோம். நிறைவான உணவு உண்ணப்படாததினால் எமது உடற் பருமன் அதிகரிக்கின்றது. அத்துடன் விற்றமின்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதக்குறைபாடுகள் ஏற்பட இடமுண்டு, நாம் போதிய உடற்பயிற்சிகளையோ உடலை வருத்தி வேலைகளையோ […]

பழங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குபவை இயற்கையாக பழுத்து கனிந்த பழங்களை உண்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் இன்பம் தரக்கூடியது. ஆனால் தற்போது பல்வேறுபட்ட காரணங்களுக்காக இரசாயண பதார்த்தங்கள் மூலம் காய்கள் பழுக்கவைக்கப்படுகின்றன. பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் பல சந்தர்ப்பங்களில் வேறுவகை இரசாயண பதார்த்தங்கள் மூலம் நீண்டநாட்களிற்கு அழுகாமல் பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மூலம் எமக்கு பழங்களின் உண்மையான சுவை கிடைப்பதில்லை அத்துடன் புற்றுநோய் போன்ற நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாகின்றோம். முற்றிய காய்களை பழுக்க வைப்பதற்கு பாரம்பரிய முறைப்படி […]

வைத்தியர் : பிள்ளையின் நிறை போதாது…… தாய் :இவவுக்கு இப்ப ஒரு வயது. கிலோ இருக்கிறதா ,மூத்த மகனும் ஒரு வயதில் கிலோ இருந்தவர். குறைவு என்று காட்டேலை. அதுதான் இவவையும் கூட்டிவரேல்லை. வைத்தியர்: இரண்டுபேரின்ரையும் பிறப்பு நிறையையும் சொல்லுங்கோ அம்மா தாய்: இவவுக்கு பிறப்பு நிறை 3.5 கி.கி, மகன் பிறக்கும் போது 1.4 கி.கி இருந்தவர் உங்கள் […]

இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோயே முதலிடம் வகிக்கின்றது. பெண்களே ஆண்களைவிட அதிகளவு மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் மார்பகத்தில் உள்ள கட்டிகள் யாவும் புற்றுநோய் கட்டிகள் அல்ல. வயதுக்கு ஏற்ப கட்டிகளுக்கான காரணங்களும் வேறுபடுகின்றன. எச்சரிக்கை குணங்குறிகளாவன : மார்பகத்தில் ஒரு தடிப்பு / வீக்கம் / கட்டி காணப்படல் மார்பக்தினுடைய தோல் இழுபட்டு / சுருங்கி இருத்தல் முலைக்காம்பின் தோலில் மாற்றம் ஏற்படல் ஒரு மார்பகத்தினுடைய அளவு வழமைக்கு மாறாக பருத்தல் மார்பக […]

தற்போதைய சூழ்நிலையில் குருதி, இனப்பெருக்கத் தொகுதி மற்றும் ஊசிகள் மூலம் கடத்தப்படும் நோய்களின் தாக்கத்துக்குட்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்த நோய்கள் கடத்தப்படும் முறைகள், நோய் அறிகுறிகள், நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி பொது மக்களுக்குத் தெளிபடுத்த வேண்டியது அவசியமாகும். 2005 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி உலக சனத்தொகையில் 15 – 49 வயதுக்குட்பட்டவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 448 மில்லியன் பேர் புதிதாக இனப்பெருக்கத் தொகுதியினால் கடத்தப்படும் நோய்களின் […]

பெரியவா்கள் பால் அருந்துவது ஆபத்தானது என்ற ஒரு தப்பான அபிப்பிராயம் பலரிடையே காணப்படுகிறது. இந்தத் தவறான மனப்பதிவு காரணமாகப் பால்குடிப்பதை நிறுத்தியவா்கள் பலா். ”நான் பயந்து பால் குடிப்பதில்லை” என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொள்பவா்கள் பலர். வீட்டிலே ஆடு, மாடுகளும் போதிய பாலும் உள்ளவா்கள்கூட அந்தப்பாலை விற்றுவிட்டு சத்துமா என்றும் ஆடைநீக்கிய பால்மா என்றும் அதிகவிலை கொடுத்து வாங்கி கரைத்துக்குடிக்கும் பரிதாப நிலை இங்கு காணப்படுகிறது. எம்மிடையே பால் ஆபத்தானது என்ற உணா்வினை ஏற்படுத்தியவா்கள் யார்? இயற்கையாகக் கிடைக்கக்கூடிய […]

மனிதனுக்கு அடிப்பமைத்தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் எவ்வளவு முக்கியமோ அதேபோல நல்ல தூக்கமும் மிகவும் முக்கியம். நாள்தோறும் உடலாலும் மனதாலும் உழைக்கும் மனிதனுக்கு நித்திரை என்ற ஒய்வு கண்டிப்பாக வேண்டும். தூக்கம் என்பது தானாக வரவேண்டிய ஒன்று நாமாக தேடிப் போனால் வராது. ஆதவாக வரும்போது மறுக்கமுடியாது. நம்மில் சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவர். ஆனால் சிலரோ எப்படிப் படுத்தாலும் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப்படுவர். பெரும்பாலும் வயதானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சினைகளில் […]

குழந்தைகளில் ஏற்படும் இருதய நோய்களைப் பிரதானமாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. Acyanotic Heart Disease (நீலநிறமற்ற இருதயநோய்) 2. Cyanotic Geart Discase (நீலநிறமாதலுடன் கூடிய இதயநோய்) Acyanotic Heart Disease (நீலநிறமற்ற இருதயநோய்) பெரும்பாலான இந்த நோய்களை சத்திரசிகிச்சையின் மூலமோ அல்லது Cardiac Catheterization மூலமோ முற்றாக குணமாக்கலாம். சில நோய்கள் தானாகவே குணமடையும் தன்மை கொண்டவை. பின்வரும் பிரதான இதய நோய்கள் இந்தப் பிரிவில் அடங்கும். 1. Patcnt Foramce Ovale (PFO) […]