You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

இன்று காய்ச்சல் என்றவுடன் எல்லோரும் பயப்படுவது டெங்குக் காய்ச்சலுக்குத்தான். ஆனால் டெங்கைப்போல ஆபத்தான காய்ச்சல் ஒன்று இருப்பதைப்பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அதுதான் உண்ணிக்காய்ச்சல். இது யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. விரைவில் இனங்காணப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம். உண்ணிக்காய்ச்சலை ஆங்கிலத்தில் “ஸ்கிரப் டைபஸ்” (Scrub Typhus) என அழைப்பார்கள். இது Orientia tsutsugamushi என்னும் சிறிய Richetsia ஆல் ஏற்படுகின்றது. ( பக்டீரியா போன்ற நுண்ணுயிர்) இந்தக்கிருமிகள் Trambiculid mits எனப்படும் தெள்ளின் குடம்பிப்பருவத்தினால் பரப்ப்படுகின்றன. […]

எனது முந்திய கட்டுரையில் ஆரோக்கியமான உணவின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடிருந்தேன். ஆரோக்கியமான உணவு உடல் நலத்துக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சியும் உடல் நலத்துக்கு இன்றியமையாதது. இன்றைய நவீன உலகின் கண்டு பிடிப்புகளின் பெரும்பான்மையானவை, மனித வேலைகளை இலகுவாகச் செய்யவே உதவுகின்றன. விவசாயத்திலும் சரி, தொழிற்சாலைகளிலும் சரி இயந்திரங்கள் மனிதர்களின் வேலைகளைச் செய்கின்றன. போக்குவரத்துக்கு வாகனங்கள் உதவுகின்றன. இதனால் மனிதன் உடலை வருத்தி வேலை செய்யாமல் சோம்பேறியாகி விட்டான். இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, கணினி போன்றவை மனிதனை […]

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முன்னோர் வாக்கு, ஒருவர் இவ்வுலகை வாழ்வை அனுபவிப்பதற்கு நோயற்ற உடல் அவசியம். நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை. தினமும் குறிப்பிட்ட தூரம் நடப்பது நல்ல தொரு தேகப்பயிற்சி, பத்திரமானது. செலவே இல்லாதது. எமது அன்றாட அலுவல்களுடன் எளிதாக இதனையும் மேற்கொள்ளலாம். இது எமது வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடிய மகிழ்ச்சி தரும் பயிற்சியாகும். எனினும் ஒரே தடவையில் நீண்ட தூரத்தை இலக்காக வைத்து நடக்க வேண்டாம். ஆரம்பத்தில் 5 – […]

வைத்தியர் – காய்ச்சல் உள்ள இந்த மூன்று நாளிலும் என்ன சாப்பாடு கொடுத்தீர்கள் தாய் – அதிகமாக பிஸ்கட்டும், பிளேண்டியும் தான், சோறும் கேட்டவன் நான் கொடுக்கவில்லை. வைத்தியர் – ஏன்? தாய் – காய்ச்சலோட சமிக்காது என்றுதான். மற்றது சாப்பாடு கொடுத்தா சக்தி ( வாந்தி) வந்தாலும் பிள்ளைக்கு கஷ்டம் தானே!! குழந்தைகளின் உணவூட்டல் சில சந்தர்ப்பங்களில் பெற்றோர்களின் தினசரிச் சவாலாக அமைகின்றது. ஆனால் குழந்தை நோயுற்ற வேளைகளில் உணவூட்டல் பற்றி எழுகின்ற பல வினாக்கள் […]

எமது கைவிரல்களினதும் கால் விரல்களினதும் நுனியைப் பாதுகாப்பது நகங்களாகும். இது மட்டுமன்றி உடல் கடிக்கும் போது சொறிவதற்கும் கைவிரல் நகங்களையே பயன்படுத்துகின்றோம். உங்கள் விரல் நகங்களை எப்போதாவது நீங்கள் நோக்கிய துண்டா? அவை தடிப்பாக இறுக்கமாக காணப்படுகின்றனவா? அல்லது நிறத்தில் வடிவத்தில் வித்தியாசம் உள்ளனவா என ஒரு நிமிடம் அவதானியுங்கள். நகத்தில் வரும் பாதிப்புகளுக்கு மிகப் பொதுவான மூலகாரணிகளாக அமைவது பங்கசு கிருமித் தொற்றும், சொறாசிஸ் ( Psoriasis) எனப்படும் ஒரு வகைத்தோல் நோயுமே ஆகும். நகங்கள் […]

மாரடைப்பு, நீரிழிவு போன்ற நோய்களை வராமல் தடுக்கலமா? இது நடை முறைச் சாத்தியமா? அல்லது வெறும் கனவுதானா? போன்ற வினாக்கள் எம் முன்னே எழுந்து கொண்டிருக்கின்றன. அன்று கண்ட கனவுகள் சில இன்று நிஜமாவது போலவே எமது முயற்சிகள் சரியான திசையில் தொடருமாக இருந்தால் இன்று காணும் கனவுகள் பல நாளை நிஜமாவது நிச்சயம். அன்று சுகபோக வாழ்வு வாழ்ந்த வசதிபடைத்த குடும்பங்களிடையே மட்டும் அதிகம் பரவியிருந்த இந்த நோய்கள் இன்று அனைவரையும் அசுர வேகத்தில் தாக்க […]

சாதாரணமாக நாம் சுவாசிக்கும் போது யாராவது அதை உணருகிறோமா? இல்லை. ஆனால் பல்வேறு நோய் நிலைமைகளில், தேவையான அளவு பிராணவாயுவை ( ஒட்சிசனை) எமது சுவாசப்பையானது. மூளை உட்பட உடலுறுப்புகளுக்கு வழங்க முடியாவிடின் சுவாச விகிதம் அதிகரிப்பதுடன் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுகின்றது. சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. சுவாசத் தொகுதியுடன் தொடர்பான காரணங்கள் நாசி தொடக்கம் சுவாசப்பையிலுள்ள குழாய்கள் வரை காற்று போய் வருவதில் தடைகள் ஏற்படின் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். உதாரணமாக […]

நீரிழிவால் பாதிக்கப்பட்ட பலருக்கு உடல், உள ரீதியாக பல்வேறு பாதிப்புகளும் சருமநோய் பாதிப்புகளும் பொதுவாகப் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. நீரிழிவில் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால் தோற் பகுதி உணர்வுதிறன் குறைவு ஏற்பட்டு தோலில் அடிக்கடி புண்கள் மற்றும் கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவதால் சருமம் பாதிப்படைகின்றது. குருதியில் வெல்ல மட்டத்தை அதிகரிக்காது கட்டுப்படுத்துவதன் மூலம், குருதியிலும் தோற் பகுதியிலும் காணப்படுகின்ற பக்றீரியாக்கள், பங்கசுக்கள், பூஞ்சனக் கிருமிகளின் ஊடாகப் போசனையைக் கட்டுப்படுத்தலாம். இதனால் அவற்றின் வளர்ச்சியையும் பெருக்கத்தையும் குறைக்கலாம். […]

இவ்வுலகில் பார்வை அற்றவர்களும் பார்வைக்குறைபாடு உள்ளவர்களும் குறிப்பிடத்தக்க அளவு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுடைய எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் உலக சுகாதார மேம்பாடு காரணமாக முதியோர் தொகை அதிகரிப்பதே. இந்த நிலை வளர்முக , வளர்ந்த நாடுகளின் அபிவிருத்தியிலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் 80 வீத பார்வை இழப்பு அல்லது பார்வைக் குறைபாட்டு நோய்கள் தடுக்கப்படக் கூடியவை என்பதாகும். முக்கிய நோய்கள் ஆவன […]

இலங்கையில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை அந்தக்காலப் பகுதியில் காணப்படவில்லை. இந்த நிலையில் இலங்கையில் பேச்சு மொழிச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை உணர்ச்த Harry wicondan இலங்கையில் பேச்சு மொழிச் சிகிச்சையாளர்களை உருவாக்குவதன் மூலமாக பேச்சு மற்றும் மொழி பிரச்சினை உடையவர்களுக்கு போதுமான சிகிச்சையை வழங்க முடியும் என எண்ணினார். அத்தோடு அவருடைய எண்ணத்தில் உதித்த சிந்தனையை செயல் வடிவமாகவும் மாற்றியமைத்தார். ஆரம்பத்தில் பேச்சு மற்றும் மொழிச் சிகிச்சை டிப்ளோமா பாட நெறியை ஆரம்பிப்பதற்கு அனைத்து தயார்ப்படுத்தல்களையும் திட்டமிட்டு […]