You are here: Diabetic Center Jaffna Teaching Hospital » Archive for the ‘வெளியீடுகள்’ Category

இன்றைய நவீன யுகத்தில் விஞ்ஞானம், மருத்துவத்துறையில் எவ்வளவு சாதனைகளை எட்டிய நிலையில் மனிதன் விணே விபத்துக்களில் சிக்கித் தன்னையும் அழித்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டிருக்கிறான். ஒரு சில விபத்துக்கள் தவிர்க்க முடியாதவை. எனினும் பெரும்பாலான விபத்துக்கள் மனிதனின் அவசரத்தாலும், போட்டியாலுந்தான் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களால் அங்கவீனம் அடைவதுடன் சிலர் மரணத்தையும் தழுவுகின்றனர். பெரும்பாலான வீதி விபத்துக்கள் அதிகூடிய வேகத்தில் வாகனம் செலுத்துவதாலும், மது போதையில் வாகனம் செலுத்து வதாலும் ஏற்படுகின்றன என்பது வைத்தியசாலைப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. […]

மேலைத்தேச நாடுகளிலே கல்சியக்குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. அதன் காரணமாகப் பல நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் அந்த நாடுகளிலே கல்சியக் குளிகைகள் பெருமளவில் பாவிக்கப்பட்டு வருகின்றன. மேலைத்தேசங்களிலே வசிக்கும் எமது உறவினர்கள் நல்ல நோக்கத்துடன் இந்தக் கல்சியம் கொண்ட சத்துக் குளிகைகள் நிரம்பிய போத்தல்களை இங்கு இருக்கும் தமது உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்தக் குளிகைகளை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் எமது மக்களும் பெருமளவில் பாவித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்திலே எமது குடி தண்ணிரில் பெருமளவு கல்சியம் இருக்கின்றது. […]

யாழ். குடாநாட்டில் அதிகரித்துவரும் தற்கொலை பலரது மனதிலும் ஏதோ இனம் தெரியாத பயணத்தையும், இயலாத் தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. பெறுமதிமிக்க உயிரின் தாற்பரியம் பூச்சி கொல்லிகளால் கரைந்து கொண்டு அலரிக்கொட்டைகளில் அழிந்து கொண்டும் இருக்கிறது. இத்தனை காலமும் தமிழ் மக்களின் உயிரிழப்புகள் பல வரலாறுகளை ஏற்படுத்தியிருக்க இப்படியாக அவலச் சாவுகள் மக்கள் மனதில் வெறுமையை ஏற்படுத்தியுள்ளன. ஏன் இத்தனை தற்கொலைகள்? யாரில் என்ன தவறுள்ளது? நம்மில் ஒரு தடவையேனும் தற்கொலை எண்ணம் தோன்றி மறையாதவர்கள் எத்தனை பேர்? விரல் […]

ஒருகாலத்தில் நம் நாட்டில் தொற்றுநோயால் இறக்கும் மக்களின் தொகை அதிகமாக காணப்பட்டது. வகை, தொகை இன்றிய இவ் இறப்புகள் அந்நேரத்தில் எம்மக்களின் அடிவயிற்றில் புளியை கரைத்தன. நிர்ப்பீடனஊசி (Vaccination) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அந்நிலை, இன்றில்லை என சந்தோஷமாக வாழ்ந்திருந்தோம். ஆனால் இன்று மீண்டும் அவ்வாறான அபாயநிலை – அவலநிலை ஒன்று தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்து வருவதனை பல மருத்துவர்களும் சமூகவியலாளர்களும் சுட்டிக்காட்டுவதுடன் எம்மாலும் உணரக்கூடியதாக உள்ளது. ஆம் எம் சமூகத்தின் மீது இருள் மேகங்கள் கவிழத் தொடங்கியுள்ளன. […]

குழந்தைப்பருவம் ஆபத்தை அறியாதது. ஆழமறியாது காலை விட்டுமாட்டிக்கொள்ளும் பருவம். பெற்றோரும் வீட்டிலுள்ளோரும் கவனம் இல்லாது இருந்தால்,விபத்துக்களில் சிக்கிக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலைத விர்க்க முடியாததே. ஓவ்வொரு வருடமும் நம் நாட்டில் 600 சிறுவர்கள் இறக்கிறார்கள். கிட்டத்தட்ட 270000 சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். காயங்கள் காரணமாக அதிகமாககாப்பாற்றப்படும் சிறுவர்கள் அங்கவீனங்களுடன் வாழ்கின்றார்கள். விபத்துக்களை தவிர்த்து வளரும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்வதானால், விபத்துக்கள் எங்கெங்கு எப்படியெல்லாம் நிகழலாம் என்பது பற்றி அடிப்படை அறிவு அவசியமாகும். அதுபற்றி இனிப்பார்ப்போம். குழந்தைகள் நிலத்தில் கிடக்கும் […]

இன்றைய வாழ்வில் நாம் செல்வத்துக்கும். செல்வம் தேடுவதற்குமே முன்னுரிமை அளிக்கின்றோம். எமது செயற்பாடுகளும் அதுசார்ந்ததாகவே இருக்கின்றன. பொருள் தேடுவதற்காக புலம்பெயர்ந்த கதைகள் பலவற்றையும் எமது வரலாற்றில் படித்திருக்கின்றோம். ஆனாலும் உண்மைச் செல்வம் எதுவென்று கண்டுகொண் டோமா? மடிக்கணினிகள் பல இருப்பதா? மகிழுந்துகள் பல இருப்பதா? மாடி மனைகள் பல இருப்பதா? மடி நிறையப் பணமிருப்பதா? எது தான் செல்வம்? உண் மைச்செல்வம் எது வென்றுமறந்தேவிட்டது. ஆரோக்கியமனமோ. ஆரோக்கிய உடலோ, ஆரோக்கிய நடத்தையோ உண்மைச் செல்வம் என்றால் அதை […]

தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மருந்துகளைப் பாவிப்பது கடினமான விடயம் என்றால் பிழையாகாது. அது எவ்வளவு கடினமானதோ அவ்வளவு முக்கியமானதும்கூட சலரோகம், உயர்குருதி அமுக்கம், வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நீண்ட காலம் மருந்து பாவிக்க வேண்டி இருக்கின்றது. ஆனால், கணிசமான எண்ணிக்கையான நோயாளிகள் மருந்துகளை ஒழுங்காகப் பாவிப்பதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணங்களாவன: மருந்துகளின் அவசியத்தை உணராமை நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் கவனயீனமாக இருத்தல். மருந்து பாவிக்கும் முறை பற்றியும், அதன் அவசியம் […]

தினந்தோறும் பாதங்களைக் காரத்தன்மை குறைந்த சவர்க் காரத்தைப் பயன்படுத்தி நன்றாகக் கழுவவும். பின்னர் மென்மையான துவாயினால்துடைக்கவும். துடைக்கும்போது விசேடமாகப் பெருவிரல் பகுதி விரல் இடைவெளிகளில் கவனம் செலுத்தவும் பாதங்களை உலர்வான நிலையில் பேணவும். ஆயினும் அதிகம் உலர்வான நிலை காணப்படுமாயின் வெடிப்புக்கள் ஏற்பட்டு பற்றிரியாக்கள் பரவலாம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதிக உலர்தலைத் தடுக்க டanolin or Waseline பாவிக்கவும். களிம்புகள் படுக்கை விரிப்பில் படுவதைத் தடுப்பதற்காகப் பழைய காலுறையை அணிந்து கொள்ளவும். இயல்பாகவே கால்களில் அதிக வியர்வை […]

எமது உடலில் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களைத் தவிர மற்றைய அனைத்து இடங்களிலும் முடி காணப்படுகின்றது. எமது உடலின் வெளித்தோலில் மயிர்ப்புடைப்புக் கலங்கள் காணப்படுகின்றன. இக்கலங்கள் மூலம் புதிய கலங்கள் உருவாக்கப்படும்போது பழைய கலங்கள் முடிகளாக வெளித்தள்ளப்படும். கெரற்றின் கொண்ட முடிகளாக உடலிற் காணப்படும். எமது தலையில் 100 000 – 150 000 வரையான முடிகள் உண்டு. இவற்றில் 100 வரையான முடிகள் நாளாந்தம் இறந்துவிடுகின்றன. நாளாந்தம் வளர்ச்சியடையும் முடிகள் 1 வருடத்தில் 15cm வரை வளரக் […]

நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது அவசியம். அக்கட்டுப்பாடு இழக்கப்படுமிடத்து பாதிப்புகள் அதிகம் ஏற்படும். 1. குருதிக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள் ஒரு வாகனம் சரியாக இயங்குவதற்கு அதற்குரிய எரிபொருள் விநியோகம் சரியான முறையில் இருக்க வேண்டும். அதேபோன்று எமது கால்களும் சரியாக இயங்க அதற்குரிய குருதி விநியோகம் சிறப்பாக அமைதல் வேண்டும். நீரிழிவு நோயாளிகளின் நாள்பட்ட நிலைமையில் அவர்களது நாடிகளில் கொழுப்பு படிவங்கள் ஏற்படும். அந்த நாட்களில் உட்பகுதி தடிப்படைந்து குருதி விநியோகிக்கும் அளவு குறைவடைகின்றது. குருதி […]